Thursday 5 July 2018

புதிய பாடத்திட்ட பொருண்மை அறிவோம்

புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி....

முன் எப்போதும் இல்லாத அளவில் .... மாறுபட்ட சிந்தனை...                  

செய்யுள், உரைநடை, துணைப்பாடம், இலக்கணம் என்ற அடிப்படை அலகிலிருந்து 'பொருண்மை' எனும் புதிய கண்ணோட்டத்திற்கு பள்ளிக்கல்வித் துறை தனது நகர்வைச் செய்துள்ளது.
1. மொழி
2. இயற்கை/வேளாண்மை/சுற்றுச்சூழல்
3. பண்பாடு
4. அறிவியல்/தொழில்நுட்பம்
5. கல்வி
6. நாகரிகம்/தொழில்/வணிகம்
7. கலை/அழகியல்/புதுமைகள்
8. நாடு/சமூகம்/அரசு/நிருவாகம்
9. அறம்/தத்துவம்/சிந்தனை
10. மனிதம்/ஆளுமை
                        - எனும் கருத்தியலின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை  தனது மாணவச்  சமூகத்தை அடுத்த புலமைத் தளத்திற்கு நகர்த்தியுள்ளது. இதற்கு பாடத்திட்டக்குழுவின்  பெருமுயற்சியும் காரணம். பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாய்ச்சல் இன்னும் வெகுதூரம் நம்மை அழைத்துச்செல்லும். மாணவ/மாணவியரின் மன வளர்ச்சிக்கு ஏற்பப் பாடுபொருளைத் தேர்வு செய்துள்ளது (உதா. கிழவனும் கடலும்- படக்கதை -காமிக்ஸ்- இதில் முக்கியமானது)

ஆறாம் வகுப்பிலிருந்து  பன்னிரண்டாம் வகுப்புவரை இது தொடர்வதால், தமிழ் சிந்தனை மரபின் தொடர்ச்சி ஆய்வாளர்கள் நிலையில் மட்டுமல்லாமல் பள்ளி மாணவ நிலையிலும் கிடைப்பதன் மூலம் எதிர்காலத் தமிழ்ச் சமூகம் மிகச்சிறந்த அறிவுச்சமூகமாக மாறும் என்பது உறுதி.

குறிப்பு:
புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி....

அட்டவணையைக் காண்க

புதிய பாடத்திட்ட பொருண்மை அறிவோம்

புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி....

முன் எப்போதும் இல்லாத அளவில் .... மாறுபட்ட சிந்தனை...                  

செய்யுள், உரைநடை, துணைப்பாடம், இலக்கணம் என்ற அடிப்படை அலகிலிருந்து 'பொருண்மை' எனும் புதிய கண்ணோட்டத்திற்கு பள்ளிக்கல்வித் துறை தனது நகர்வைச் செய்துள்ளது.
1. மொழி
2. இயற்கை/வேளாண்மை/சுற்றுச்சூழல்
3. பண்பாடு
4. அறிவியல்/தொழில்நுட்பம்
5. கல்வி
6. நாகரிகம்/தொழில்/வணிகம்
7. கலை/அழகியல்/புதுமைகள்
8. நாடு/சமூகம்/அரசு/நிருவாகம்
9. அறம்/தத்துவம்/சிந்தனை
10. மனிதம்/ஆளுமை
                        - எனும் கருத்தியலின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை  தனது மாணவச்  சமூகத்தை அடுத்த புலமைத் தளத்திற்கு நகர்த்தியுள்ளது. இதற்கு பாடத்திட்டக்குழுவின்  பெருமுயற்சியும் காரணம். பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாய்ச்சல் இன்னும் வெகுதூரம் நம்மை அழைத்துச்செல்லும். மாணவ/மாணவியரின் மன வளர்ச்சிக்கு ஏற்பப் பாடுபொருளைத் தேர்வு செய்துள்ளது (உதா. கிழவனும் கடலும்- படக்கதை -காமிக்ஸ்- இதில் முக்கியமானது)

ஆறாம் வகுப்பிலிருந்து  பன்னிரண்டாம் வகுப்புவரை இது தொடர்வதால், தமிழ் சிந்தனை மரபின் தொடர்ச்சி ஆய்வாளர்கள் நிலையில் மட்டுமல்லாமல் பள்ளி மாணவ நிலையிலும் கிடைப்பதன் மூலம் எதிர்காலத் தமிழ்ச் சமூகம் மிகச்சிறந்த அறிவுச்சமூகமாக மாறும் என்பது உறுதி.

குறிப்பு:
புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி....

அட்டவணையைக் காண்க

புதிய பாடத்திட்ட பொருண்மை அறிவோம்

புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி....

முன் எப்போதும் இல்லாத அளவில் .... மாறுபட்ட சிந்தனை...                  

செய்யுள், உரைநடை, துணைப்பாடம், இலக்கணம் என்ற அடிப்படை அலகிலிருந்து 'பொருண்மை' எனும் புதிய கண்ணோட்டத்திற்கு பள்ளிக்கல்வித் துறை தனது நகர்வைச் செய்துள்ளது.
1. மொழி
2. இயற்கை/வேளாண்மை/சுற்றுச்சூழல்
3. பண்பாடு
4. அறிவியல்/தொழில்நுட்பம்
5. கல்வி
6. நாகரிகம்/தொழில்/வணிகம்
7. கலை/அழகியல்/புதுமைகள்
8. நாடு/சமூகம்/அரசு/நிருவாகம்
9. அறம்/தத்துவம்/சிந்தனை
10. மனிதம்/ஆளுமை
                        - எனும் கருத்தியலின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை  தனது மாணவச்  சமூகத்தை அடுத்த புலமைத் தளத்திற்கு நகர்த்தியுள்ளது. இதற்கு பாடத்திட்டக்குழுவின்  பெருமுயற்சியும் காரணம். பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாய்ச்சல் இன்னும் வெகுதூரம் நம்மை அழைத்துச்செல்லும். மாணவ/மாணவியரின் மன வளர்ச்சிக்கு ஏற்பப் பாடுபொருளைத் தேர்வு செய்துள்ளது (உதா. கிழவனும் கடலும்- படக்கதை -காமிக்ஸ்- இதில் முக்கியமானது)

ஆறாம் வகுப்பிலிருந்து  பன்னிரண்டாம் வகுப்புவரை இது தொடர்வதால், தமிழ் சிந்தனை மரபின் தொடர்ச்சி ஆய்வாளர்கள் நிலையில் மட்டுமல்லாமல் பள்ளி மாணவ நிலையிலும் கிடைப்பதன் மூலம் எதிர்காலத் தமிழ்ச் சமூகம் மிகச்சிறந்த அறிவுச்சமூகமாக மாறும் என்பது உறுதி.

குறிப்பு:
புதிய பாடத்திட்டத்தில் பொருண்மைகளின் தொடர்ச்சி....

அட்டவணையைக் காண்க

Friday 22 June 2018

தினமும் இரண்டு வேளை பல் துலக்கினால் மாரடைப்பு வராது

தினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு வராது.


காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.


இதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ்’ எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது:


உடலில் தேவையற்ற கொழுப்பு, லிப்பிட் பொருட்கள் அதிகமானால் ரத்தக்குழாயில் அவை படிகின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது. கொழுப்பு, லிப்பிட் மட்டுமல்ல.. வைரஸ் கிருமிகள் மற்றும் நோய்த் தொற்றுகளால்கூட மாரடைப்பு ஏற்படும். பெரும்பாலும் கிருமித் தொற்று பல்லில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. 


வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும் உணவுப் பொருட்கள் செரிக்கப்பட்டு சக்தியாகவும் சத்துகளாகவும் மாறுகின்றன. பல்லில் படியும் உணவுத் துகள்கள் கிருமிகளாக மாறுகின்றன. ஒழுங்காக பல் தேய்க்காவிட்டால் இவை உள்ளே சென்று படிப்படியாக மாரடைப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். 

தினமும் 2 வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு, ஸ்டிரோக் வரும் வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை குறையும். இதயம் பலமாக இருக்கும்

Sunday 3 June 2018

உடல் மொழிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

உடல் மொழி


1.மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது.


2.மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.


3.மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.


4.நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.


5.நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.


6.பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.


7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.


8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.


9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.


10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்

Friday 1 June 2018

மூளை பாதிப்படையக் காரணங்கள்

நம் மூளை சில நேரங்களில் ஏன் பாதிக்கிறது


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.


2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.


3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.


4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.


5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.


6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.


7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.


8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.


9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.


10. பேசாமல் இருப்பது : அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது


Saturday 26 May 2018

உங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க வேண்டுமா ?

நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்:


* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.


* புரியாமல் எதையும் படிக்க கூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை.


* முழு கவனம் மிக அவசியம்.


* mnemonics வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்.


உதாரணம்: news – north, east, west, south


* படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.


* படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும்


* நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.


* இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும்.


* தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்.


* மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது.